லக்ஷ்மி கடாக்ஷம் பெருகட்டும்!


இன்றைய வரலக்ஷ்மி பூஜை நாளின் செல்வம் பெருக, வளம் கொழிக்க நல்வாழ்த்துக்கள்!

வளம் கொழிக்கும் ஒரு பங்கின் ஞாபகம் வருகிறது. 28 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கம்பெனியிடம் இப்போது சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலே கேஷ் பேலன்ஸ் இருக்கின்றது. இது இன்னமும் லிஸ்டிங் செய்யப் படாததால், ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்ஃபர் மட்டுமே ஷேர் சர்டிஃபிகேட் மூலமாக நடைபெறுகின்றது.

ஒரு பங்கின் விலை, புத்தக மதிப்புப்படி, ரூ. 65,000 என்று வர்த்தகமாகிறதாம். ஆனாலும், சுமார் ஒன்றரை லட்சம் வரையிலும் (ஒரு பங்கிற்கு மட்டும்) கூட விலை போகிறதாம்.

ஏனெனில், நிர்வாகத்தில் இயக்குனர் பொறுப்பில் வர ஒரு சில பெரிய கைகள் ஆர்வம் காட்டுகின்றனவாம். அதனாலேயே இந்த அளவிற்கு விலை போகிறதாம்.

அதிலேயும் சுமார் எட்டு சதவீத முதலீட்டாளர்கள் யாரென்றே தெரிய வில்லையாம். அதாவது அந்த ஷேர் சர்டிஃபிகேட்கள் யாரிடம் இருக்கின்றவென்றே தெரியவில்லையாம்.  உடனேயே உங்கள் வீட்டில் பழைய ஆவணங்கள் வைத்திருக்கும், தாத்தா, பாட்டியினுடைய  அலமாரி, பெட்டி முதலியானவைற்றைத் திறந்து, TMB (தமிழ்நாடு மெர்க்கண்ட்டைல் பாங்க்) ஷேர்களை அவர்கள் வாங்கி வைத்திருக்கிறார்களா என்று எதற்கும் ஒரு தடவை செக் பண்ணிடுங்க!

🙂

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

செய்தி உபயம்: திரு. செந்தில் சின்னதுரை

செல்வ வளம் பெருகட்டும்!

செல்வ வளம் பெருகட்டும்!

 

 

About KaalaiyumKaradiyum
Trying to be a system trader; but the discretion takes over and the system goes for a toss. Just hangin in. You can make it Babu! Don't give up!

2 Responses to லக்ஷ்மி கடாக்ஷம் பெருகட்டும்!

  1. Thirunavukkarasu N says:

    I wish …..my father might have bot it. OK,
    no problem I will buy it.

இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க!